Monday 14 April 2014

காலம் என்னைக்
கரை சேர்க்கும், என்
கவலைகளுக்கு
இதம் வார்க்கும்.
 
எதுவும் மறக்கும்.
எங்கோ ஓர் வழி திறக்கும்.
நாளை பூக்கும் பூவில்
நல்ல வாசம் இருக்கும்.
 
தென்றல் என்னைத்
தேடிவரும் அதன்
தருணம் வரும்போது.
செய்ய வேண்டுவதெல்லாம் நான்
நம்பிக்கையுடன் காத்திருப்பதே.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home