தமிழ்நாட்டில் எல்லோரும் தற்போது ஜயலலிதாவின் ஜாமீன் மனு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால் நாம் ஒன்றை கவனிக்க தவறி விட்டோம்.ஜெயலலிதா குற்றவாளியா இல்லையா என்பது
நாம் ஆராய வேண்டாம்.அதை அவர் பார்த்து கொள்வார்.நாம் நமது மனசாட்சிப்படி எல்லாவற்றையும்
அணுக வேண்டும்.
நமக்கு என்று வரும் போது நாம் செய்யும் எல்லா தவறுகளையும் நாம் நியாய படுத்துகிறோம்.
நிஜமாக யாராவது தவறு செய்யாதவர்கள் இருக்கிறார்களா என்றால் எவரும் இல்லை.
எனவே எல்லாம் அவரவர் விதிப்படி தான் நடக்கிறது.
இன்று காந்தி ஜயந்தி.இன்று முதல் நாம் நம்மை பண்படுத்திக்கொள்வோம்.
முதலில் நாம் நல்லவர்களாக மாறுவோம்.முடிந்த வரையில் மற்றவர்களுக்கு நாம் உதவி செய்வோம்.
எது வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். இதுவும் கடந்து போகும். வந்தே மாதரம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home